மன்னித்து விடுங்கள் : தற்கொலைக்கு முன்னர் இளம் திருநங்கையின் உருக்கமான கடிதம்!!

779

அமெரிக்காவில் இளம் திருநங்கை ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ள நிலையில் பெற்றோருக்கு எழுதிய உருக்கமான கடிதம் கிடைத்துள்ளது.

ப்ளோரிடா மாகாணத்தை சேர்ந்தவர் எரிக் மெக்கே வெர்பீக் (17). ஆணாக பிறந்த எரிக் தனது உடலில் மாற்றம் ஏற்படுவதை ஒரு ஆண்டுக்கு முன்னர் உணர்ந்து இதுகுறித்து தனது தாய் பேட்ரிசியாவிடம் கூறியுள்ளார்.

இந்நிலையில் கடந்த 6-ஆம் திகதி எரிக் திடீரென கடிதம் எழுதிவிட்டு தற்கொலை கொண்டுள்ளார். அந்த கடிதத்தில், தவறான உடலுடன் நான் பிறந்ததை என்னால் சமாளிக்க முடியவில்லை.

இந்த போலியான வாழ்க்கையை வாழ பிடிக்கவில்லை, என்னை மன்னித்து விடுங்கள், நான் உங்களிடம் பொய் சொல்லிவிட்டேன்.

திருநங்கையாக இருப்பது என் பாலின உரிமை, ஹோப் என்ற பெயருடைய திருநங்கையாகவே நான் உங்கள் நினைவில் இருக்க விரும்புகிறேன் என எழுதியுள்ளார்.

எரிக்கின் தாய் பேட்ரிசியா கூறுகையில், எரிக் விருப்படியே வரும் யூன் மாதம் முதல் அவள் பெயரை ஹோப் என மாற்றலாம் என முடிவு செய்திருந்தோம்.

நீ எப்படி இருக்க விரும்புகிறாயோ அப்படியே இருக்கலாம் என எரிக்குக்கு நான் தைரியம் கொடுத்தேன். ஆனால் அதற்குள் இப்படியொரு முடிவை எடுத்துவிட்டார் என சோகத்துடன் கூறியுள்ளார்.