கட்டுப்பாட்டை இழந்த விண்வெளி நிலையம் : மெக்சிகோவில் விழும் என கணிப்பு!!

427

சீன விண்வெளி நிலையம், விண்வெளியில் கட்டுப்பாட்டை இழந்துள்ளதால் மெக்சிகோ நாட்டில் விழுந்து நொறுங்கும் என ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.

சீனாவின் விண்வெளி நிலையமான தியாங்காங், கடந்த 2011ஆம் ஆண்டு விண்ணில் ஏவப்பட்டது. ஆனால், கடந்த 2016ஆம் ஆண்டு கட்டுப்பாட்டை இழந்த இந்த விண்வெளி நிலையம், தற்போது தறிகெட்டு சுற்றி வருகிறது.

இந்நிலையில், இந்த விண்வெளி நிலையமானது ஏப்ரல் மாதம் 3ஆம் திகதி வாக்கில், மெக்சிகோ நாட்டில் விழும் என ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.

சுமார் 8.5 டன் எடையுள்ள தியாங்காங், புவியின் வளிமண்டலத்தில் நுழையும் போது, காற்றின் உராய்வு காரணமாக தீப்பற்றும் என்று கூறப்படுகிறது. இதனால், எரிந்த நிலையில் அதன் சிதைவுகள் தான் பூமியில் விழும் என தெரிய வந்துள்ளது.