பேரினவாதிகளால் அரசியல் யாப்பு சீர்குலைக்கப்பட்டுள்ளது : பாராளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன்!!

473

ராஜபக்ச ஆட்சி முடிவுக்க கொண்டுவரப்பட்ட நிலையில் அராஜக ஆட்சி முடிவுக்கு கொண்டுவரப்பட்டு அர்த்தபுஸ்டியான அரசியல் யாப்பு நாட்டுமக்களுக்கு திட்டமிடப்பட்டது.

ஆனால் பேரினவாதிகளால் அரசியல் யாப்பு சீர்குலைக்கப்பட்டுள்ளது என வன்னி பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிவமோகன் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் உள்ள வன்னி பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிவமோகனின் பிரத்தியோக காரியாலயத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த வன்னி பாராளுமன்ற உறுப்பினர்.

உள்ளுராட்சி தேர்தலின் மூலம் ராஜபக்சவின் கை ஒங்கியுள்ளதுடன் சிறுபான்மை மக்களாகிய முஸ்லிம்கள் மீது வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது.

இதன் காரணமாக தமிழர்கள் தங்கள் இருப்பை தக்கவைக்க கரிசனை கொள்ள வேண்டும் என்பதுடன் தமிழ் தேசிய கூட்டமைப்பை உடைக்க முயற்சி செய்கிறார்கள்.

புதுக்குடியிருப்பு, வெருகல் பிரதேசசபை மற்றும் பூனகரி பிரதேச சபையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு நேரடியாக ஆட்சி அமைக்க தேர்தல் ஆணையகம் உத்தரவிட்டுள்ளது.

வன்முறையின்போது சமூக வலைத்தளங்களை தடுத்துவிடும்போது உண்மைநிலை வெளிவருவதை தடுப்பதுதான் அதன் நோக்கமாக இருந்துள்ளது.

வன்முறையின்போது சிறுபான்மையினம் பாதிக்கபடும்போது தமிழர்கள் குரல் கொடுப்பார்கள் காரணம் தமிழர்கள் வலியை உணர்ந்தவர்கள்.

தேர்தலில் ஏற்பட்ட சரிவுக்கு காரணம் புதிய தேர்தல் முறை இருந்தபோதும் தமிழினத்தை ஒற்றுமையாக வைத்திருப்பதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு கடுமையாக உழைக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.

இலங்கை அரசு புதிதாக மக்கள் வசிக்காத பகுதிகளில் விகாரைகளை அமைப்பது ஏற்றுக்கொள்ள முடியாது. தமிழ் தேசிய கூட்டமைப்பு இவ்வாறான விடயத்தை கடுமையாக எதிர்க்கிறது.

அரச நிறுவனங்களில் மத வழிபாட்டு தளங்களை உருவாக்குவது முற்று முழுதாக தவறான விடயம் அதை ஏற்றுக்கொள்ள முடியாது.

வலக்கட்டாயமாக காணமல் ஆக்கப்பட்டவர்கள் நிகழ்ச்சி நிரல் ஒட்டுமொத்தமாக மறைக்கப்பட்டுள்ளது. அது தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கு இக்கட்டான ஒரு நிலைமையை ஏற்படுத்தியுள்ளது.

அரசியல் கைதிகள் விவகாரத்தில் விடுவிக்கப்படகூடியவர்கள் அரசினால் விடுவிக்கப்பட்டுள்ளனர் மிகுதியானவர்கள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் மூலம் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கி புதிய சட்டத்தை உருவாக்கும் போதுதான் அரசியல் கைதிகளின் பிரச்சனை முடிவுக்கு வரும் என தெரிவித்தார்.