பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி உயிரோடு புதைக்கப்பட்ட பரிதாபம்!!

260

abuseபாகிஸ்தானில் அடையாளம் தெரியாத நபர்களால் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்ட சிறுமி ஒருவர் உயிரோடு புதைக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

லாகூரில் இருந்து 225 கி.மீ தூரத்தில் இருக்கும் டோபா செக் சிங் மாவட்டத்தை சேர்ந்த 13 வயது சிறுமியை அடையாளம் தெரியாத இரு ஆண்கள் கடத்தினர்.

பின்னர் அச்சிறுமியை யாருமில்லாத இடத்திற்கு அழைத்து சென்ற அவர்கள் அங்கு அவரை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியுள்ளனர்.

பின்னர் அவரை உயிருடன் புதைத்து படுகொலை செய்துள்ளனர். பாகிஸ்தானில் சிறுவர்கள் பாலியல் கொடுமைக்கு ஆளாகும் சம்பவங்கள் அதிகரித்து வருவது மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.