ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை : அதிர்ச்சிக் காரணம்!!

720

இந்தியாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தெலங்கானா மாநிலம், செகந்திராபாத்தில் உள்ள ஜெனரல் பஜார் சாலை அருகே வசித்து வந்தவர் ஸ்வரூப் (37). தங்க வேலை செய்து வந்த இவருக்கு தீபா (30) என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் இருந்துள்ளனர். அதில் ஒரு குழந்தை பிறந்து 5 மாதம்தான் ஆகிறது.

இந்நிலையில், அனைவரும் நேற்று குடும்பத்தோடு வீட்டில் தற்கொலை செய்துகொண்டனர். இதனைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்த மகன்காளி பொலிசார் உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இவர்கள் வறுமை காரணமாக தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது. எனினும், தற்கொலைக்கான காரணம் உறுதியாகத் தெரியவில்லை.

எனவே, தற்கொலைக்கான காரணம் குறித்து இறந்தவர்களின் உறவினர்களிடம், பொலிசார் விசாரித்து வருகின்றனர்.