காதலனை திருமணம் செய்து கொள் : தற்கொலை செய்துகொண்ட கணவனின் உருக்கமான கடிதம்!!

393

இந்தியாவில் மனைவிக்கு வேறு ஒருவருடன் தொடர்பு இருப்பதை அறிந்த கணவன் உருக்கமான கடிதம் எழுதிவிட்டு தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலத்தின் ஹைதராபாத்தை சேர்ந்தவர் ஆச்சாரி (24). இவருக்கு உஷா ராணி என்ற பெண்ணுடன் கடந்த இரண்டாண்டுக்கு முன்னர் திருமணம் நடந்தது.

இந்நிலையில் தனது வீட்டருகில் வசிக்கும் ஸ்ரீகாந்த் என்பவருடன் உஷாவுக்கு தொடர்பு ஏற்பட்டுள்ளது.

இதையறிந்த ஆச்சாரி நேற்று தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் ஆச்சாரியின் சடலத்தை கைப்பற்றியதோடு அருகிலிருந்த கடிதத்தையும் கைப்பற்றியுள்ளார்கள்.

அதில், அப்பா, அம்மா என்னை மன்னித்து விடுங்கள். நான் தோல்வியடைந்தவன்.

என் மனைவி உஷா அவள் விருப்பபடி ஸ்ரீகாந்தை திருமணம் செய்து கொள்ளட்டும், இதை என் கடைசி ஆசையாக எடுத்து கொள்ளுங்கள்.

உஷா மீது எந்தவொரு பழியையும் சுமத்தாதீர்கள் என எழுதப்பட்டுள்ளது. சம்பவம் குறித்து பொலிசார் விசாரித்து வருகிறார்கள்.