தாயின் கழுத்தை அறுத்து தலையுடன் சரணடைந்த இளைஞர்!!

703

தமிழகத்தில் சொத்து பிரச்சனை காரணமாக தனது தாயை கொலை செய்து, அவரின் தலையுடன் இளைஞர் ஒருவர் பொலிசில் சரணடைந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே உள்ள மறவம்பட்டியை சேர்ந்தவர் ஆனந்த். இவரின் தந்தை தங்கராசு, கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் படுகொலை செய்யப்பட்டார்.

தங்கராசுவின் கொலையில் அவரின் மனைவி ராணி மீது பொலிசாருக்கு சந்தேகம் எழுந்ததைத் தொடர்ந்து, அவர் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார்.

ராணிக்கும் அவரது மூத்த மகன் ஆனந்திற்கும் இடையே சொத்து பிரச்சனை காரணமாக, அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இன்று இவர்கள் இருவருக்கும் ஏற்பட்ட பிரச்சனையில் ஆத்திரமடைந்த ஆனந்த், அவரது தாய் ராணியை கழுத்தறுத்து படுகொலை செய்தார்.

அதன் பின்னர், அவரின் தலையை வெட்டி எடுத்த ஆனந்த், கறம்பக்குடி காவல்நிலையத்தில் தலையுடன் சரணடைந்துள்ளார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த பொலிசார், மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.