காருக்குள் குழந்தையை அடைத்து வைத்த கொடூரத் தாய் கைது!!

361

carபிரான்சில் தாய் ஒருவர் தனது 2 வயது குழந்தையை காருக்குள் அடைத்து வைத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரான்சில் உள்ள வாகனம் பழுது பார்க்கும் மெக்கானிக் கடையில் பெண் ஒருவர் தனது காரினை விட்டுச் சென்றுள்ளார். சில நாட்கள் கழித்து காரிலிருந்து துர்நாற்றம் வரவே திறந்து பார்த்ததில் 2 வயது குழந்தை காருக்குள் கிடந்தது.

இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த மெக்கானிக் மருத்துவமனையில் சேர்த்துள்ளார். குழந்தைக்கு சுயநினைவு இருந்துள்ளது ஆனால் காய்ச்சல் மற்றும் காயங்கள் ஏற்பட்டிருந்தன.

இதனைத் தொடர்ந்து குறித்த மெக்கானிக் பொலிசாரிடம் புகார் கொடுத்தார். இதனையடுத்து பொலிசார் நடத்திய விசாரணையில், அக்குழந்தையின் தாய்க்கு ஏற்கனவே மூன்று குழந்தைகள் உள்ளன.

இக்குழந்தை காணாமல் போனது குறித்து பெற்றோர் எந்த கவனமும் இல்லாமல் இருந்தது தெரியவந்துள்ளது.

மேலும் அக்கம்பக்கத்தினர் வீட்டிற்கு வெளியே எப்போதும் ஒரு கார் நிற்கும் என்றும் ஆனால் குழந்தையை காரினுள் பார்த்தில்லை எனவும் கூறியுள்ளார். மற்றொரு நபர் இக்குழந்தை பிறந்ததையே இன்று வரை பதியவில்லை என கூறியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து குழந்தையின் பெற்றோர்கள் மீது குழந்தை முறைகேடு மற்றும் புறக்கணிப்பு என வழக்குகள் பதிவுசெய்யப்பட்டு பத்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.