வீட்டு மேற்கூரை மீது ஏறிய இளம் மொடலுக்கு நேர்ந்த சோகம்!!

767

லண்டனில் வீட்டின் மேற்கூரை மீது ஏறி புகைப்படம் எடுத்த இளம் மொடல் அழகி உயிரிழந்த நிலையில் அதிகளவில் போதை மருந்தை அவர் உட்கொண்டது தெரியவந்துள்ளது.

டொனி கெல்லி (20) என் மொடல் நவம்பர் மாதம் தனது வீட்டின் மேற்கூரையின் மீது உள்ளாடையுடன் கமெராவை எடுத்து கொண்டு ஏறியுள்ளார்.

வானத்தை புகைப்படம் எடுக்க போவதாக நண்பர்களிடம் கூறிவிட்டு ஏறிய நிலையில் நிலைதடுமாறி பின்பக்கமாக மேலிருந்து கீழே விழுந்துள்ளார்.

இதையடுத்து மூளையில் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கெல்லி விபத்து நடந்து இரண்டு நாள் கழித்து நவம்பர் 14ஆம் திகதி உயிரிழந்தார்.

இந்நிலையில் நச்சுயியல் அறிக்கையில் கெல்லி அதிகளவில் கொக்கெயின் எனப்படும் போதை மருந்தை உட்கொண்டது தெரியவந்தது.

கெல்லி மேற்கூரையிலிருந்து கீழே விழுந்த அன்று அவருடன் இருந்த பாலிய நண்பர் பேட்ரிக் ராபின்சன் கூறுகையில், சம்பவதன்று ஒரு பார்டிக்கு தனது தோழிகளுடன் சென்று விட்டு கெல்லி வீட்டுக்கு வந்தார்.

பார்டிக்கு செல்லும் போதே அவர்கள் இரண்டு பைகளில் கொக்கெயின் போதை மருந்தை எடுத்து சென்றனர்.

பின்னர் வீட்டுக்கு வந்து தோழிகளுடன் பேசிவிட்டு மேற்கூரையின் மீது ஏறி வானத்தை புகைப்படம் எடுக்க போவதாக கூறினார்.

நான் வேண்டாம் என கூறியும் அவர் கேட்காமல் மேலே ஏறினார். அப்போது கெல்லி தீடீரென கீழே விழுந்த போது அவரை பிடிக்க முயற்சி செய்தேன், ஆனால் என்னால் முடியவில்லை என கூறியுள்ளார்.