ஆப்கானிஸ்தானில் பெண்ணொருவர் தனது கைக்குழந்தையை மடியில் வைத்துக் கொண்டு, தரையில் அமர்ந்து தேர்வு எழுதிய புகைப்படம் ஒன்று வைரலானது.
ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த பெண் ஜஹன்தாப் அஹம்தி(25), மூன்று குழந்தைகளுக்கு தாயான இவர், பல்கலைக்கழக தேர்வை தனது கைக்குழந்தையை மடியில் வைத்துக் கொண்டு, தரையில் அமர்ந்து எழுதியுள்ளார்.
இந்த புகைப்படத்தினை பல்கலைக்கழக் பேராசிரியர் நாசிர் குஸ்ரா வெளியிட்டதுடன், ‘நீதான் இந்த உலகின் உண்மையான சம்பியன். ஒரு பெண் நினைத்தால் செய்ய முடியாதது எதுவுமே இல்லை.
அதுவும் எந்த சூழ்நிலையிலும் என்பதை பல்லாயிரக்கணக்கான பெண்களுக்கும் உணர்த்தியுள்ளாய்’ என பதிவிட்டிருந்தார். இந்த புகைப்படம் உலகம் முழுவதும் வைரலானது.
இதுகுறித்து ஜஹன்தாப் கூறுகையில், ‘தைகுந்தி என்ற எந்த வசதியும் இல்லாத கிராமத்தில் இருந்து வருகிறேன். எனது படிப்பை எந்த காரணத்திற்காகவும் விட்டுவிட நான் விரும்பவில்லை.
நான் வீட்டுக்கு வெளியே வந்து பணியாற்ற விரும்புகிறேன், நான் மருத்துவராகி சேவை செய்ய வேண்டும் என்று கருதுகிறேன்’ என தெரிவித்துள்ளார்.
ஜஹன்தாப்பின் புகைப்படத்தால் மாவட்ட நிர்வாகம் நிதியுதவி அளிக்க முன்வந்துள்ள நிலையில், அவரின் துணிவுக்கு உலக நாடுகளில் இருந்து பாராட்டுக்களும் குவிந்து வருகின்றன.







