முள்ளிவாய்க்காலில் தாயையும் 3 சகோதரர்களையும் இழந்தபோதும் 9A சித்திபெற்று சாதித்த மாணவன்!!

1081

முள்ளிவாய்க்கால் மேற்கு கனிஷ்ட உயர்தர வித்தியாலயத்தில் கல்வி கற்ற இராசேந்திரம் பிரதீபன் என்னும் மாணவன் கல்வி பொதுத்தராதர சாதராணதரப் பரீட்சையில் 9ஏ பெறுபேறுகளை பெற்று சித்தியடைந்துள்ளார். இது தொடர்பில் குறித்த மாணவன் இன்று கருத்து தெரிவிக்கையில்..

இறுதி யுத்தத்தின் போது(2009) எனது தாயும் மூன்று சகோதரர்களும் படையினரின் எறிகணைத் தாக்குதலினால் உயிரிழந்துள்ளனர்.

இந்த துயரச் சம்பவம் என் மனதை பெரிதும் பாதித்திருந்த நிலையில் என் தந்தையின் அரவணைப்பினாலும் அதிக ஊக்கத்தினாலும் இன்று 9A பெறுபேறுகளை பெற்றுள்ளேன்.

தொடர்ந்து கணிதத்துறையில் கல்வியை கற்று ஒரு விமானியாக வருவதே என் எதிர்கால இலட்சியம் என்று தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற கல்வி பொதுத்தராதர சாதராணதரப் பரீட்சையில் முள்ளிவாய்க்கால் மேற்கு கனிஷ்ட உயர்தர வித்தியாலயத்தில் தோற்றிய 12 மாணவர்களில் இரண்டு மாணவர்கள் 9A பெறுபேறுகளை பெற்றுள்ளனர்.

அத்துடன் 8 மாணவர்கள் சித்தியடைந்து தொடர்ந்து உயர்தரத்தில் கற்பதற்கு தகுதி பெற்று, முள்ளிவாய்க்கால் மேற்கு கனிஷ்ட உயர்தர வித்தியாலயத்திற்கு பெருமை சேர்த்துள்ளதாக குறித்த பாடசாலை அதிபர் தெரிவித்துள்ளார்.