மாணவனின் உயிரைப் பறித்த டேட்டிங் செயலி!!

603

டெல்லியில் டேட்டிங் செயலிக்கு(Apps) அடிமையான மாணவர் அதன் காரணத்தினாலேயே கொலை செய்யப்பட்டுள்ளார்.

டெல்லியை சேர்ந்த மாணவர் ஆயுஷ் கடந்த 3 நாட்களுக்கு முன்னர் கடத்தப்பட்டிருந்தார் , உங்களது மகன் கிடைக்கவேண்டுமென்றால், நான் கேட்கும் பணத்தை கொடுக்கவேண்டும் எனக்கூறி நான் சொல்லும் இடத்திற்கு வாருங்கள் என ஆயுஷின் பெற்றோருக்கு மெசேஜ் வந்துள்ளது.

மெசேஜை பார்த்து பெற்றோர் அங்கு சென்றுள்ளனர், ஆனால் இவர்கள் சென்ற இடத்தில் யாரும் இல்லை. இவ்வாறு இரண்டு, மூன்று இடங்களுக்கு கடத்தல்காரர்கள் அழைத்துள்ளனர்.

இந்நிலையில், நீண்ட தேடுதலுக்குப் பிறகு, ஆயுஷ் சடலமாக ஒரு பயணப்பொதியில் கண்டெடுக்கப்பட்டார். இதுகுறித்து பொலிசார் நடத்திய விசாரணையில், மாணவர் ஆயுஷ், தனது குடும்பத்தினருக்குத் தெரியாமல், அதிகமாக டேட்டிங் அப் பயன்படுத்தி வந்திருக்கிறார்.

ஒரு கட்டத்தில், அதற்கு அடிமையான அவர், அதை அதிகமாகப் பயன்படுத்தத் துவங்கியுள்ளார். இந்த அப்பின் மூலம் பழக்கமான இஷ்தியாக் அலி என்பவருக்கும் ஆயுஷுக்கும் ஏற்பட்ட
சண்டையில் இஷ்தியாக், ஆயுஷின் தலையில் சுத்தியால் பலமாகத் தாக்கியுள்ளார்.

அதனால், ஆயுஷ் அதே இடத்திலேயே விழுந்து இறந்துள்ளார். அவரின் உடலை மறைக்க நேரம் தேவைப்பட்டதனாலேயே, ஆயுஷின் போனிலிருந்து அவரின் குடும்பத்தாருக்கு மெஸ்சேஜ் அனுப்பியுள்ளார் இஷ்தியாக். இதையடுத்து, இஷ்தியாக் அலி கைதுசெய்யப்பட்டுள்ளார்.