ஆற்றில் நீராடிய தாய் மற்றும் மகள் உட்பட நான்கு பேர் பலி!!

546

காலி – ஹினிதும பிரதேசத்தில் கிங் கங்கை ஆற்றில் நீராடிய தாய் மற்றும் மகள் உட்பட நான்கு பேர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

39 வயதான லியனகமகே சியாமலி அனோமா (தாய்), 14 வயதான மாபலகம லியனகே மனுரிகா, முத்துஹெட்டிகமகே ரவிந்தி யசஸ்மினி, மடவலவிதானகே கவீஷா அஞ்சலி ஆகியோரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர்.

ஹினிதும நகருக்கு அருகில் உள்ள நுககல சந்திப் பகுதியில் அமைந்துள்ள நண்பியின் வீட்டிற்கு வந்த பிள்ளைகள், நண்பியின் தாயை அழைத்துக் கொண்டு ஆற்றில் குளிக்க சென்ற போது இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

இதேவேளை, சடலங்கள் ஹினிதும வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.