14 வயதுடைய காதலியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 16 வயதுடைய இளைஞர் ஒருவரை கைது செய்துள்ளதாக ஆராச்சிகட்டுவ பொலிஸார் தெரிவித்தனர்.
ஆராச்சிகட்டுவ – நல்லதரன்கட்டுவ பகுதியை சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யக்கட்டுள்ளார்.
துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட சிறுமி மற்றும் சந்தேகநபரான இளைஞன் ஆகிய இருவரும் ஒரே பாடசாலையில் கல்வி கற்று வந்தவர்கள் என தெரியவந்துள்ளது.
பாடசாலை செல்லும் போது இவர்களுக்கு இடையில் காதல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கடந்த 27 ஆம் திகதி சந்தேகநபரால் குறித்த சிறுமியை புதிதாக கட்டப்படுக்கொண்டிக்கும் பாளடைந்த கட்டிடம் ஒன்றிற்கு அழைத்து சென்று துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக சிறுமியின் தாயார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை செய்துள்ளார்.
சிறுமியை பரிசோதனைகளுக்காக சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் சந்தேகநபரை சிலாபம் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
சம்பவம் தொடர்பில் ஆராச்சிகட்டுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.






