நாட்டில் உஷ்ணமான காலநிலை தொடரும்!!

602

நாட்டில் தற்போது நிலவும் வெப்பமான காலநிலை இம்மாதம் இறுதி வரை நீடிக்கலாம் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கடந்த நாட்களில் நாட்டின் பல பகுதிகளில் வெப்பத்தின் அளவு 1 முதல் 3 செல்சியஸ் வரை அதிகரித்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் கூறியுள்ளது.

இந்நிலையில், நிலவும் வெப்பமான காலநிலை இம்மாதம் மாதம் இறுதி வரை நீடிக்கலாம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, காற்றின் வேகம் குறைவடைந்தமை உள்ளிட்ட பல காரணிகளால் வெப்பமான வானிலை நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.