பிரித்தானியாவில் வாழும் இலங்கையர் ஒருவர் உயிர்கொல்லி நோயினால் தீவிரமாக பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
இலங்கையில் பிறந்து பிரித்தானியா பிபிசி செய்தியாளராக பணியாற்றும் ஜோர்ஜ் அழகையா இரண்டாவது தடவையாகவும் புற்று நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார்.
தன்னை பாதித்துள்ள நோயின் தாக்கம் குறித்து மிகவும் தாமதமாக கண்டுபிடித்துள்ளதாக ஜோர்ஜ் அழகையா தெரிவித்துள்ளார்.
ஸ்கொட்லாந்தில் இதேபோன்ற பரிசோதனை நடைமுறைகள் இருந்திருந்தால் இதனை முன்பு கண்டறிந்திருக்கலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
லண்டனில் வசிக்கும் 62 வயதான ஜோர்ஜ் அழகையா குடல் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டிருக்கும் விடயம் கடந்த கிறிஸ்துமஸ் தினத்திற்கு முன்னர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஸ்கொட்லாந்தில் ஆண்கள் மற்றும் பெண்கள் தானாக 50 வயதிலிருந்து ஒவ்வொரு இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை குடல் புற்றுநோயை பரிசோதிக்கின்றார்கள். இந்த நடைமுறை கீழ் பிரித்தானியாவில் 60 வயதிலேயே பரிசோதனை மேற்கொள்ளப்படுகின்றது.
குடல் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டவர்கள் ஐந்தாண்டுகளுக்கு மேல் வாழ்வதற்கான சந்ர்ப்பம் வெறும் பத்து வீதமே உள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
நான் 58 வயதாக இருந்த போது குறைந்தபட்சம் மூன்று தடவை பரிசோதித்தேன். எனினும் நான்காவது முறையே கண்டறியப்பட்டதாக ஜோர்ஜ் தெரிவித்துள்ளார்.
நாம் ஆரம்பத்தில் குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டால் உயிர்வாழும் விகிதங்கள் மிகப்பெரியவை என்று நமக்குத் தெரியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜோர்ஜ் அழகையா தனது சிகிச்சை நிலை தொடர்பில் டுவிட்டரில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார். அதில் “என் புற்றுநோய் மிகவும் தாமதமாக கண்டறியப்பட்டுள்ளது. அதற்கு ஆரம்ப பரிசோதனைகள் முக்கியமானதாகும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் பிறந்து தற்போது லண்டனில் வாழும் ஜோர்ஜ் அழகையா இரண்டாவது முறையாக குடல் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.






