திடீரென தீப்பிடித்து எரிந்த முச்சக்கரவண்டி!!

833

நாவலப்பிட்டி – தலவாக்கலை பிரதான வீதியில் இன்று மாலை பயணித்துக் கொண்டிருந்த முச்சக்கரவண்டியொன்று திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது.

குறித்த சம்பவம் கெட்டபுலா சந்தியில் வைத்து இடம்பெற்றுள்ளதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முச்சக்கரவண்டி தீடீரென தீ பற்றிய போது ஓட்டுனரும், வண்டியில் பயணித்த மற்றொரு நபரும் கீழே பாய்ந்த நிலையில் எவ்வித தீக்காயங்களுமின்றி இருவரும் உயிர்தப்பியுள்ளனர்.

இதனையடுத்து பிரதேசவாசிகள் இணைந்து தீயை அணைக்க முயற்சித்தும் சுமார் 7 இலட்சம் ரூபா பெறுமதியான முச்சக்கரவண்டி முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது.

இந்த நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவிக்கின்றனர்.