இலங்கையில் புதிய வரைபடம் விரைவில்!!

595

“இலங்கையின் புதிய வரைபடம் சுமார் 18 வருடங்களின் பின்னர் இலங்கை நில அளவைத் திணைக்களத்தால் தயாரிக்கப்பட்டுவருகின்றது” என்று நில அளவையாளர் அதிகாரி உதயகாந்த தெரிவித்துள்ளார்.

புதிய வரைபடத்தில் இலங்கையின் துறைமுக நகரமும் உள்ளடக்கப்படும்.

இலங்கையின் கிழக்கு மற்றும் தெற்கு கடற்கரைப் பரப்புகள் அதிகரித்துள்ளதுடன், சிலாபம் கடற்கரைப் பரப்பு குறைவடைந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையின் புதிய வரைபடம் செய்மதி உதவியுடன் தயாரிக்கப்படும். இதன் பணிகள் நிறைவடைந்ததும் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையதளத்தில் வெளியிடப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.