போலி கடன் அட்டைகளை தயாரித்த முன்னாள் பொலிஸ் அதிகாரி கைது!!

533

போலி கடன் அட்டைகளை தயாரித்த முன்னாள் பொலிஸ் அதிகாரி ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

போலி கடன் அட்டைகளை தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படும் 400 அட்டைகளுடன் முன்னாள் பிரதான பொலிஸ் பரிசோதகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் இன்று தெமட்டகொட பிரதேசத்தில் நடத்திய விசேட தேடுதல் வேட்டையின் போது குறித்த முன்னாள் பொலிஸ் அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த நபரிடமிருந்து கடல் அட்டைகள் மற்றும் வெளிநாட்டு சிகரட் பக்கட்டுகள் உள்ளிட்டனவும் மீட்கப்பட்டுள்ளன.

இதேவேளை, சந்தேக நபரின் வீட்டிலிருந்து சில ஆயுதங்களும் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், பிரதம பொலிஸ் பரிசோதகராக கடமையாற்றிய குறித்த சந்தேக நபர் கடந்த 2007ஆம் ஆண்டு பணி இடைநிறுத்தத்திற்கு உள்ளாகியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.