கொழும்பில் பிரபல ஊடக நிறுவனம் ஒன்றின் மீது தாக்குதல்!!

287

கொழும்பில் அமைந்துள்ள பிரபல ஊடக நிறுவனமான News first ஊடக வலையமைப்பின் தலைமை அலுவலகம் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமருக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பு முடிந்த பின்னர் அடையாளம் தெரியாத நபர்களினால் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில். அந்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.