ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆறு அமைச்சர்களை பணி நீக்கம் செய்யுமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அமைச்சர்களான எஸ்.பி. திஸாநாயக்க, டபிள்யூ.டி.ஜே.செனவிரட்ன, அனுர பிரியதர்சன யாப்பா, சுசில் பிரேமஜயந்த, சந்திம வீரக்கொடி மற்றும் தயாசிறி தயசேகர ஆகியோரை பதவி நீக்குமாறு பிரதமரிடம் கோரப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் 33 உறுப்பினர்கள் பிரதமரிடம் எழுத்து மூலம் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.
பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மான யோசனை தோற்கடிக்கப்பட்டதன் பின்னர், இந்த ஆவணம் பிரதமரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்தில் அங்கம் வகித்துக் கொண்டு அரசாங்கத்தை விமர்சனம் செய்தல், அமைச்சரவை தீர்மானங்களை விமர்சனம் செய்தல் உள்ளிட்ட அரசாங்கத்திற்கு எதிரான செயற்பாடுகளினால் இவர்களை அமைச்சுப் பதவியிலிருந்து நீக்குமாறு கோரப்பட்டுள்ளது.
இந்தக் கோரிக்கை தொடர்பான பிரதியொன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
-தமிழ்வின்-