கொழும்பில் முதன் முதலாக விபத்து எப்போது ஏற்பட்டது தெரியுமா : வைரலாகும் புகைப்படம்!!

590

இலங்கையில் ஒவ்வொரு நாளும் ஏற்படும் மரணங்களில் விபத்தால் ஏற்படும் மரணங்களே அதிகமாக இருக்கின்றன.

விபத்தால் ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. இதை நாம் கூறவில்லை. புள்ளி விபரத்தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கையின் எல்லா இடங்களிலும் விபத்துக்கள் ஏற்படுகின்றன. கிராமமாக இருக்கட்டும் நகரமாக இருக்கட்டும் விபத்துக்கள் ஏற்படத்தான் செய்கின்றன.

எனினும், அப்போதைய காலக்கட்டத்தில் வாகனங்களின் எண்ணிக்கை குறைவாகும். வீதிகளில் வாகனங்களை விரல் விட்டு எண்ணலாம். விபத்துக்களும் குறைவாகவே ஏற்பட்டன. ஆனால் தற்போது அந்த நிலை இல்லை.

இன்று இலங்கையின் எல்லா பக்கங்களிலும் விபத்துக்கள் ஏற்பட்டவண்ணமே உள்ளன. மற்ற இடங்களை விட கொழும்பிலேயே அதிக வாகன விபத்துக்கள் ஏற்படுகின்றன.

அந்த வகையில் கொழும்பில் முதன்முதலாக எப்போது வாகன விபத்து ஏற்பட்டது தெரியுமா?

1910ஆம் ஆண்டு, அதாவது 108 வருடங்களுக்கு முன்னர் கொழும்பில் முதன்முதலாக வாகன விபத்து ஏற்பட்டது. இதன்போது எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது சமூகவலைத்தளத்தில் பரவி வருகின்றது.

கொழும்பு – கோட்டைக்கு பயணிகளை ஏற்றிச்செல்லும் வண்டி ஒன்றும், மற்றைய வண்டி பிரிட்டிஷ் அதிகாரியால் பயன்படுத்தப்படும் ஒரு தனியார் வாகனமாக இருக்கலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.