இலங்கையில் மழையுடனான காலநிலை தீவிரம் பெறும்!!

701

வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம் காரணமாக மழையுடன் கூடிய காலநிலை தீவிரம் பெறும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தெற்கு, ஊவா, கிழக்கு, சப்ரகமுவ மாகாணங்களிலும் பொலன்னறுவை மாவட்டத்திலும் இன்று மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அந்தப் பகுதிகளில் 100 மில்லி மீற்றருக்கும் அதிகமான மழை பெய்யும் என எதிர்பாரக்கப்படுவதாக குறிப்பிடப்படுகின்றது.

விசேடமாக கிழக்கு, தெற்கு மற்றும் தெற்கு கடல் பிரதேசங்களிலும், மட்டக்களப்பில் இருந்து ஹம்பாந்தோட்டை மற்றும் காலி ஊடாக கொழும்பு வரையிலான கடல் பகுதிகளிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

காற்றின் வேகம் மணிக்கு 70 – 80 கிலோ மீற்றர் வேகத்தில் வீசும் என்பதனால் கடல் எல்லைகளில் கொந்தளிப்பான நிலை காணப்படும் எனவும் இதன் காரணமாக மீனவர்கள் அவதானமாக செயற்படுமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.