நக்கீல்ஸ் வனத்திற்கு சென்ற 7 பேர் மாயம் : தீவிர தேடுதல் வேட்டையில் பொலிஸார்!!

817

நக்கீல்ஸ் வனப்பகுதியை பார்வையிடச் சென்ற 7 பேர் காணாமல் போயுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.

ஹோமாகமை பிரதேசத்தை சேர்ந்த இவர்கள் 6ஆம் திகதி வீட்டிலிருந்து நக்கீல்ஸ் வனப்பகுதியை பார்வையிட சென்றதாகவும், இதுவரை அவர்களிடம் இருந்து எந்த தகவலும் இல்லை எனவும் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இவர்களுடைய தொலைபேசியும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில் நேற்று இரவு பொலிஸ் அவசர அழைப்பு பிரிவிற்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய ரங்கல, உடுதும்பர, இறத்தோட்டை மற்றும் லக்கல பொலிஸார் இணைந்து காணாமல் போயுள்ளவர்களை தேடும் நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.