புற்றுநோயை எதிர்க்கும் 3 அரிசி வகைகள் கண்டுபிடிப்பு!!

404


இந்தியாவின் சத்தீஸ்கரில் புற்றுநோயை எதிர்க்கும் 3 அரிசி வகைகளை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளனர்.



ராய்ப்பூரிலுள்ள இந்திரா காந்தி க்ரிஷி விஷ்வவித்யாலயா மற்றும் மும்பை பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் புற்றுநோய் குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.

ஆய்வுகளின் முடிவில் சத்தீஸ்கரின் பாரம்பரியமிக்க மூன்று அரிசி வகைகளான கத்வான், மகாராஜி, லைச்சா முதலிய அரிசிகளில் புற்றுநோயை எதிர்த்துப் போராடும் திறன் உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.



இந்த அரிசி வகைகள் நுரையீரல் மற்றும் மார்பகப் புற்றுநோய்களையும் குணப்படுத்தும் பண்புகளைப் பெற்றுள்ளன.



அதிலும், லைச்சா வகை அரிசி புற்றுநோய் செல்கள் பரவுவதைத் தடுத்து, செல்களை அழித்து குணப்படுத்துவதாகக் கண்டறியப்பட்டுள்ளது.


இவ்வரிசி பல நோய்களை நீக்கும் மருந்தாகவும், தோல் நோய்களுக்கு மருந்தாக குறிப்பாக பஸ்தார் பழங்குடி இனத்தினர் வசிக்கும் பகுதிகளில் பயன்படுத்தப்படுகிறது.

இந்த அரிசிகளை நாள் ஒன்றுக்கு 200 கிராம் உட்கொள்வதன் மூலம் பலன் கிடைக்கும் என ஆய்வாளர்கள் நம்பிக்கை வௌியிட்டுள்ளனர்.