இலங்கையில் மீன் விலை அதிகரிப்பை கட்டுப்படுத்த விசேட நடவடிக்கை!!

811

பண்டிகைக் காலத்தில் மீன் விலை அதிகரிப்பதைக் கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு மீன்பிடி மற்றும் நீரியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த அமரவீர இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனத்தைப் பணித்துள்ளார்.

இதேவேளை, சந்தையில் மோசடி வியாபாரிகளால் நுகர்வோர் சுரண்டப்படுவதைத் தவிர்ப்பது இதன் நோக்கமாகும்.