இலங்கையில் எதிர்வரும் சில நாட்களுக்கு பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக மேல், வடமேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சியும் எதிர்பார்க்கப்படுகின்றது.
இதேவேளை, சூரியனின் வடக்கு நோக்கிய இயக்கம் காரணமாக இவ்வருடம் ஏப்ரல் 05 முதல் 15 வரை சூரியன் இலங்கையின் அகலாங்குகளுக்கு மேலாக உச்சம் கொடுக்க உள்ளது.
அந்த வகையில் இன்று நண்பகல் 12.11 அளவில் கல்குடா, வெலிக்கந்தை, பொலன்னறுவை, அம்பன்பொல மற்றும் மதுரங்குளி ஆகிய பிரதேசங்களுக்கு மேலாக சூரியன் உச்சத்தில் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இலங்கையின் மலைப்பான சில பகுதிகளில் மண்சரிவு மற்றும் நிலம் தாழிறக்கம் என்பவற்றிட்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த எச்சரிக்கையை தேசிய கட்டட ஆரய்ச்சி நிறுவனம் விடுத்துள்ளதுடன், இரத்தினபுரி பிரதேச செயலக பிரிவிலுள்ள சகல மலைப்பாங்கான பகுதிகள்






