முல்லைத்தீவு இளைஞர் மாயம் : தாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு!!

1149

 
முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பைச் சேர்ந்த இளைஞரொருவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பில் காணாமல் போனதாக கூறப்படும் இளைஞரின் தாயாரால் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த முறைப்பாட்டில், புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட உடையார் கட்டுப்பகுதியில் உறவினர்களுடன் வசித்து வந்த ஜேசுதாசன் நியூசன் என்ற இளைஞரே நேற்று முன்தினம் (09.04.2018) காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.