ஆற்றில் இருந்து மீனவரின் சடலம் மீட்பு!!

550

 

வாகரைப் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பனிச்சங்கேணி ஆற்றில் வயோதிப மீனவர் ஒருவரின் சடலம் நேற்றைய தினம் மீட்கப்பட்டுள்ளதாக வாகரைப்பொலிஸார் தெரிவித்துள்ளார்.

பனிச்சங்கேணி சல்லித்தீவில் வசித்து வந்த 64 வயதுடைய தங்கராசா என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த மீனவரின் சடலம் வாகரை பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டு, பிரேத பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மேலும் குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாகரைப்பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.