20 வருடம் பல் துலக்காமல் இருந்த நபர் : இறுதியில் என்ன ஆனார் தெரியுமா?

682

 

பிரித்தானியாவைச் சேர்ந்த ஜே(21) எனும் இளைஞன் தனது குழந்தை பருவம் முதல் சுமார் 20 ஆண்டுகள் வரை பல் துலக்காமல் இருந்துள்ளார். 20 வருடமாக பல் துலக்காததால் ஜே வாயிலிருந்து அதிகளவு துர்நாற்றம் வந்துள்ளது. மேலும் அவரது பல்லை பற்றி கேள்வி கேட்பவர்களிடம் முகம் கொடுத்து பேச முடியாமல் தவித்த ஜே ஒரு வழியாக அவரது பல் பிரட்சனைக்கு தீர்வு காண விரும்பியுள்ளார்.

அதற்காக ஜே பல் மருத்துவரிடம் பரிசோதனைக்கு சென்ற போது, அவருடைய பற்களின் நிலை மிகவும் மோசமாக இருப்பது தெரியவந்தது.

பல் துலக்காமல் இருந்ததால் மட்டுமே அவரது பற்கள் இவ்வளவு மோசமாகவில்லை சிறுவயது முதல் அதிக இனிப்பு பொருட்கள் போன்ற பற்களுக்கு கேடு விளைவிக்கும் பொருட்களையே அவர் அதிகம் விரும்பி சாப்பிட்ட காரணத்தால் இந்த கோரமன நிலை அவரது பற்களுக்கு ஏற்பட்டுள்ளது.

மேலும் அதிகமாக சோடா பானங்களை உட்கொண்டதாலும், பற்களை இதுவரை சுத்தம் செய்யாமல் இருந்ததாலும் தான் பற்களுக்கு இந்த நிலை ஏற்பட்டது என்று ஜே மருத்துவரிடம் கூறியுள்ளார்.

இதனால் ஜேவின் வாயை சோதித்த மருத்துவர்கள் அவரின் வாயில் பல பற்கள் சொத்தையாகவும், பல கிருமிகள் அவரது பற்களில் இருந்ததையும் கண்டுபிடித்துள்ளனர்.

இதனால் மிகவும் மோசமாக இருந்த அவரது 11 பற்கள் பிடுங்கி எறிய முடிவு செய்யப்பட்டது. இதற்காக 18 மில்லிமீட்டர் வரை துளையிடப்பட்டு செயற்க்கை பற்கள் பொருத்தப்பட்டன. மீதம் இருந்த பற்கள் சுத்தம் செய்யப்பட்டன, இதன் பின்னர் 6 மாதம் கழித்து அவர் பற்கள் அனைவரையும் போல சாதாரணமாக மாறியது.