முல்லைத்தீவில் பொலிஸாருக்கு அஞ்சி ஓடியவர் பரிதாபமாக பலி!!

696

முல்லைத்தீவு – இடைகட்டு ஏரிக்கு அருகில் உள்ள பிரதேசத்தில் நடத்தி செல்லப்பட்ட சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையத்தை சுற்றிவளைப்பதற்கு பொலிஸார் முயற்சித்துள்ளனர். இதன் போது அங்கிருந்து தப்பி சென்ற சந்தேக நபர் உயிரிழந்துள்ளார்.

பொலிஸ் அதிகாரிகளுக்கு அஞ்சி தப்பிச் செல்ல முயற்சித்த சந்தர்ப்பத்திலேயே குறித்த நபர் உயிரிழந்துள்ளார். இடைக்கட்டு ஏரி நீரில் விழுந்தமையினால் அவர் இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் முல்லைத்தீவு பிரதேசத்தை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையாகும். மரணம் தொடர்பில் முல்லைத்தீவு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.