கடும் மழை காரணமாக கட்டுநாயக்க விமானநிலையத்தில் ஏற்பட்டுள்ள நிலை!!

255

 

கொழும்பு – பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் அமைந்துள்ள குடிவரவு அலுவலகத்தின் ஒருபகுதி உட்கூரையானது உடைந்து விழுந்துள்ளது. கடும் மழை காரணமாக இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பில் விமான நிலைய அதிகாரிகள் கருத்து தெரிவிக்கையில், “இதுவரை செயல்பட்டு வந்த 10 குடிவரவு அலுவலகங்களில் 3 பிரிவுகளை மறுசீரமைப்பு காரணமாக மூடியுள்ளதாக” தெரிவித்துள்ளனர்.

பெரும் மழை காலங்களில் இதற்கு முன்னரும் குடிவரவு அலுவலகங்களில் உள்ள உட்கூரையானது பல முறை உடைந்து விழுந்துள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். இருப்பினும் நிர்ந்தர தீர்வுக்கு இதுவரை அதிகாரிகளால் எட்ட முடியவில்லை என கூறப்படுகிறது.

நாட்டின் சுற்றுலா வளர்ச்சியை இதுபோன்ற செயல்கள் கடுமையாக பாதிக்கும் எனவும் அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.