தாயையும், சகோதரியையும் இழந்த சிறுமியின் கண்ணீர் பேட்டி!!

868

africaசஹாரா பாலைவனத்தை கடக்க முயன்ற போது தாயையும், சகோதரியையும் இழந்த சிறுமி தன்னுடைய அனுபவங்களை விவரித்துள்ளார்.

ஆபிரிக்க நாடான நைஜர் உலகில் உள்ள வறுமையான நாடுகளில் ஒன்றாகும். இங்குள்ள மக்கள் உணவு பற்றாக்குறை காரணமாக பட்டினியால் வாடி வருகின்றனர்.

வறுமையின் கொடுமை தாங்காமல் ஐரோப்பிய நாடுகளுக்கு செல்கின்றனர். அவ்வாறு செல்பவர்கள் உலகின் மிகப்பெரிய பாலைவனமான சஹாரா பாலைவனத்தை கடந்து செல்லவேண்டும்.

இவ்வாறு கடந்து செல்லும் போது தண்ணீர் கிடைக்காமல் பலர் பலியாவதுண்டு. சமீபத்தில் கூட இதேபோன்று சென்றவர்களில் 87 பேர் பலியாயினர்.

இவர்கள் செப்டம்பரின் கடைசி அல்லது அக்டோபரின் முற்பகுதியில் நைஜரின் ஆர்லீட் நகரிலிருந்து பயணத்தைத் தொடங்கியுள்ளனர். சஹாரா பாலைவனத்தைக் கடந்து அல்ஜீரியாவை அடைய முயன்ற போது உயிரிழந்துள்ளனர்.

தொழில்தேடி புறப்பட்டவர்களும் அவர்களின் குடும்பத்தினருமாக 52 சிறார்களும் 33 பெண்களும் இந்த பாலைவன பயணத்தில் உயிரிழந்துள்ளதாக தற்போது தெரியவந்துள்ளது.

இதில் தனது தாயையும்,சகோதரியையும் இழந்த சிறுமி ஒருவர், தனது கொடுமையான அனுபவங்கள் குறித்து பிபிசியிடம் விவரித்துள்ளார்.

வெப்பம் எரிக்கும் பாலைவனத்தில் வாகனம் பழுதடைந்த இடத்திலிருந்து இரண்டு நாட்களாக நடந்து சென்ற தமக்கு அந்த வழியால் வந்த ஒரு வாகனம் கூட உதவவில்லை என்று உயிர்தப்பிய 14 வயது சிறுமி ஷாஃபா பிபிசியிடம் கூறினாள்.

வரும்வழியில் உயிரிழந்த தாயையும் இரண்டு சகோதரிகளையும் தானே புதைத்துவிட்டு வந்ததாகவும் அந்தச் சிறுமி தெரிவித்துள்ளார்.

தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ள மீட்பு பணியாளர்கள் மக்கள் கூட்டம் கூட்டமாக உயிரிழந்து காணப்படுவதாக தெரிவித்துள்ளனர்.