ஆசிய நாட்டு பெண்களிடம் பல லட்சம் யூரோ கொள்ளை : 15 வயதான சிறுமிக்கு கிடைத்த தண்டனை!!

298

ஆசியாவின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பெண்களிடம் கொள்ளையிட்ட 15 வயதுடைய சிறுமி ஒருவருக்கு Créteil சிறுவர்களுக்கான நீதிமன்றம் சிறைத்தண்டனை வழங்கியுள்ளது. சர்வதேச ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில், நான்கு ஆசியாவைச் சேர்ந்த பெண்களிடம் கொள்ளையிடப்பட்ட சம்பவம் பாரிசில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த கொள்ளையில், இளம் பெண் ஒருவர் ஈடுபட்டதாகவும், பல இலட்சம் யூரோக்கள் வரை திருடியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்திருந்தனர். அப்பகுதிகளில் அடிக்கடி இதுபோன்று ஆசிய பெண்களை குறிவைத்து கொள்ளைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளது.

விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார், கல்லூரியில் படிக்கும் 15 வயதுடைய இளம் பெண்ணை ஒருவரை சம்பவம் தொடர்பில் கைது செய்திருந்தனர். இந்நிலையில், குறித்த பெண்ணுக்கு தற்போது சிறைத்தண்டன விதிக்கப்பட்டுள்ளது..

இதேவேளை, இந்த கொள்ளை சம்பவம் தொடர்பில் மேலும் சில மாணவர்களை பொலிஸார் கைது செய்திருப்பதாக சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.