வருங்கால கணவர் செய்த செயல் : உயிரை விட்ட இளம்பெண்!!

333

இந்தியாவில் தன்னை திருமணம் செய்யவிருந்த இளைஞர் திடீரென திருமணம் செய்ய மறுத்ததால் மனமுடைந்த இளம்பெண் தற்கொலை செய்து கொண்டுள்ளார். உத்தரபிரதேச மாநிலத்தின் கசியாபாத்தை சேர்ந்தவர் பிரியங்கா வர்மா (25). இவர் அங்குள்ள விடுதியில் தங்கி வேலை செய்து வந்தார். பிரியங்காவுக்கும் இளைஞர் ஒருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்த நிலையில் விரைவில் திருமணம் நடக்கவிருந்தது.

இந்நிலையில் வருங்கால கணவருடன் பிரியங்காவுக்கு சண்டை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பிரியங்காவை திருமணம் செய்து கொள்ளமுடியாது என அவர் கூறியுள்ளார். இதனால் மனமுடைந்த பிரியங்கா தனது தோழிக்கு போன் செய்து நடந்தவற்றை கூறி, எல்லாமே முடிந்துவிட்டது என அழுதுள்ளார்.

பின்னர், ஏதோ விபரீதம் நடக்கவுள்ளது என்பதை உணர்ந்த தோழி பிரியங்காவின் விடுதிக்கு வந்து அவர் அறை கதவை திறந்த போது பிரியங்கா தூக்கில் சடலமாக தொங்கியுள்ளார்.

இது குறித்து பொலிசுக்கு தகவல் தரப்பட்ட நிலையில் சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் பிரியங்காவின் சடலத்தை கைப்பற்றிவிட்டு இது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.