மூன்று பெண்கள் மீது ஒரே நேரத்தில் அசிட் வீசிய நபர் : அதிர்ச்சிக் காரணம்!!

350

பாகிஸ்தானை சேர்ந்த 2 சகோதரிகள் அவர்களது தோழியுடன் ஒன்றாக பேருந்து நிலையத்தில் காத்திருந்த போது மூன்று பேர் மீதும் அசிட் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அவர்களின் மாமா திருமணம் செய்துகொள்ள விருப்பம் தெரிவித்த போது சகோதரிகளில் ஒருவர் அதற்கு மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் விரக்தியடைந்த அவர்களின் மாமா பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் டாங் மாவட்டத்தில் பேருந்து நிறுத்தம் ஒன்றில் சகோதரிகள் இருவர் தங்களது தோழியுடன் பேருந்திற்காக காத்திருந்த போது அசிட் வீசி தாக்குதல் நடத்தியுள்ளார்.

அதில் கடுமையாக பாதிக்கப்பட்ட அவர்களின் தோல் சம்வ இடத்திலேயே கருக தொடங்கியுள்ளது. வலியால் துடித்த அவர்கள் மூவரையும் அருகில் இருந்தவர்கள் உடனடியாக அவர்களை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இதில் இரு சகோதரிகளின் மாமா முதன்மை குற்றவாளியாக சந்தேகிக்கப்படுகிறார். மற்றொரு குற்றவாளி மாமாவின் நண்பர் என அடையாளம் காணப்பட்டு உள்ளார். அவர்கள் இருவரும் தப்பியோடி விட்டனர்.

இந்த வழக்கு பற்றிய அறிக்கை ஒன்றை பஞ்சாப் முதல் மந்திரி ஷாபாஸ் ஷெரீப் மற்றும் ஐ.ஜி. ஆரிப் கேட்டுள்ளனர். குற்றவாளிகளை கைது செய்யும்படி மூத்த பொலிஸ் அதிகாரிகளுக்கும் அவர்கள் உத்தரவிட்டு உள்ளனர்.