அமெரிக்காவில் 18 வயதான இந்தியர் நடுரோட்டில் சுட்டுக்கொலை!!

298

அமெரிக்காவில் இந்திய இளைஞரை பொலிசார் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்துள்ளனர். கலிபோர்னியாவை சேர்ந்தவர் நதானியல் பிரசாத் (18). இந்திய வம்சாவளியை சேர்ந்தவரான இவரை ஒரு குற்ற வழக்கிற்காக பொலிசார் தேடி வந்தனர்.

இந்நிலையில் பிரீமாண்ட் பகுதியில் பிரசாத் ஒரு காரில் சென்று கொண்டிருந்த நிலையில் காரை ஒரு பெண் ஓட்டி சென்றார். அவரை பார்த்த பொலிசார் அது குறித்து போக்குவரத்து பொலிசுக்கு தகவல் கொடுத்தனர்.

அதை தொடர்ந்து ரோந்து பணியில் இருந்த பொலிசார் பிரசாத்தை பிடிக்க முயன்ற நிலையில் அவர் காரிலிருந்து இறங்கி தப்பியோடினார். அவரை பொலிசார் துரத்தி சென்ற போது அவர்களை நோக்கி பிரசாத் துப்பாக்கியால் 3 தடவை சுட்டார்.

இதையடுத்து பொலிசார் பிரசாத்தை நோக்கி திருப்பி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டு கொன்றனர். இதற்கிடையே காரை ஓட்டி வந்த பெண் பிரசாத்தின் தாய் என தெரியவந்துள்ள நிலையில் அவர் பொலிசில் சரணடைந்துள்ளார்.