நான் சாகப் போகிறேன் : நகைச்சுவையில் முடிந்த தற்கொலை!!

650

தமிழகத்தில் மனைவியுடன் ஏற்பட்ட சண்டை காரணமாக தற்கொலைக்கு முயன்ற நபரின் செயல் கடைசியில் காமெடியில் போய் முடிந்துள்ளது. சென்னை அடையார் கூவம் ஆற்றில் மதுபோதையில் நின்று கொண்டிருந்த நபர் மனைவியுடன் ஏற்பட்ட சண்டை காரணமாக, அங்கிருந்தவர்களிடம் நான் சாகப் போகிறேன் டாடா பை பை என்று கூறிவிட்டு அங்கிருந்து குதித்துள்ளார்.

தற்போது சென்னை நிலவும் தண்ணீர் பஞ்சத்திற்கு எந்த ஆற்றில் குதித்தாலும், மார்பளவில் கூட தண்ணீர் இல்லை, இவர் குதித்ததோ கூவம் ஆற்றில் என்பதால் அங்கு இடுப்பளவிலே தண்ணீர் இருந்தது.

இதனால் தற்கொலை செய்ய முடியவில்லையே என்று நீரில் மூழ்க முடியாமல் நின்று கொண்டிருந்தார். இது குறித்த தகவல் பொலிசாருக்கு தெரியவந்ததால் காவல்துறையினர், தீயணைப்புத்துறையினர், போக்குவரத்து காவல்துறையினர் அங்கு விரைந்து பத்திரமாக அவரை மீட்டனர்.

முப்படைகளின் உதவியோடு மீட்கப்பட்ட அவர் டாடா காட்டி கொண்டே வி.ஐ.பி. போல் மேலே வந்தார். அப்போது இதைக் கண்டவர்கள் இதுக்கா இந்த பில்ட் அப் என்று கிண்டலடித்தபடி சென்றுள்ளனர்.