வவுனியா மாவட்ட செயலகத்தில் 653 பட்டதாரிகளுக்கு நேர்முகத் தேர்வு!!

1367

வவுனியா மாவட்ட செயலகத்திலுள்ள மனிதவள வேலைவாய்ப்பு திணைக்களத்தில் கடந்த திங்கட்கிழமை 16ம் திகதியிலிருந்து வெள்ளிக்கிழமை 20.04.2018 வரை 653 பட்டதாரிகளுக்கு நேர்முகத் தேர்வு இடம்பெற்றுள்ளதாக மனிதவள வேலைவாய்ப்புத் திணைக்கள அதிகாரி தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கும்போது,

வவுனியா மாவட்ட செயலகத்தினூடாக வேலைவாய்ப்பினைப் பெற்றுக்கொள்ளும் பட்டதாரிகளுக்கான நேர்முகத் தேர்வு கடந்த திங்கட்கிழமை 16ம் திகதியிலிருந்து இடம்பெற்று வருவதாகவும் வெள்ளிக்கிழமை மாலை வரையான காலப்பகுதி வரை 653 பட்டதாரிகளுக்கு நேர்முகத் தேர்விற்கு சமூகமளித்துள்ளனர்.

எதிர்வரும் திங்கட்கிழமை பிற்பகல் 2 மணிவரையும் பட்டதாரிகளுக்கு மனிதவள வேலைவாய்ப்பு திணைக்களத்தில் நேர்முகத் தேர்வு இடம்பெறவுள்ளது. இக்காலப்பகுதிக்குள் நேர்முகத் தேர்விற்கு சமூகளிக்கத்தவறிய பட்டதாரிகள் உடனடியாக நேர்முகத்தேர்விற்கு சமூகமளிக்குமாறு மேலும் தெரிவித்துள்ளார்.