மாமியாரை சங்கிலியால் கட்டிவைத்து அடித்து கொடுமைப்படுத்திய மருமகள்!!

318

ஆந்திராவில் வயதான மாமியாரை அவரின் மகனும், மருமகளும் சேர்ந்து சங்கிலியால் கட்டி வைத்து கொடுமைப்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குணடாலா பகுதியை சேர்ந்தவர் அஞ்சய்யா. இவர் மனைவி மேரி நிர்மலா ராணி. இந்நிலையில் அஞ்சய்யாவின் அம்மா பிரகாசம்மா (70)-வை அஞ்சய்யாவும், நிர்மலாவும் வீட்டு மொட்டை மாடியில் சங்கிலியால் கட்டிவைத்து அடித்து உதைத்துள்ளனர்.

இதோடு சரியான உணவும், தண்ணீரும் கொடுக்காமல் பட்டினி போட்டு வந்துள்ளனர். இப்படி 40 நாட்களாக பிரகாசம்மா கொடுமையை அனுபவித்த நிலையில் அக்கம்பக்கத்தினர் இதை பார்த்து பொலிசுக்கு தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் பிரகாசம்மாவை மீட்ட நிலையில் அஞ்சய்யாவையும், நிர்மலாவையும் கைது செய்தனர்.

மீட்கப்பட்ட பிரகாசம்மா கருணை இல்லத்தில் சேர்க்கப்பட்டுள்ள நிலையில் தற்போது நலமாக உள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இதனிடையில், பிரகாசம்மாவின் நிலத்தை அஞ்சய்யா விற்றதோடு, அவரின் ஓய்வூதிய பணத்தையும் மனைவியுடன் சேர்ந்து அனுபவித்து வந்தது தெரியவந்துள்ளது.