திருமணம் செய்துவைக்காததால் தாயை அடித்துக் கொன்ற மகன்!!

430

தமிழ்நாட்டில் திருமணம் செய்து வைக்காததால் ஆத்திரத்தில் பெற்ற தாயை கொலை செய்த மகனின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரை சேர்ந்தவர் மாரியம்மாள் (45). இவரின் கணவர் இறந்துவிட்ட நிலையில் மகன் ராமஜெயம் (23)-துடன் வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று மதியம் திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு விட்டு மதுபோதையில் ராமஜெயம் வீட்டுக்கு வந்ததாக கூறப்படுகிறது.

வீட்டுக்கு வந்ததும் ராமஜெயம், தனது தாய் மாரியம்மாளிடம், தனக்கு ஏன் இன்னும் திருமணம் செய்து வைக்கவில்லை என கூறி வாக்குவாதம் செய்துள்ளார்.

அப்போது மாரியம்மாள் ஏதோ சொல்லி சமாளிக்க, அதை ஏற்காத ராமஜெயம் ஆத்திரத்தில் பெற்ற தாயை கடப்பாரையால் தலையில் அடித்து கொலை செய்துவிட்டு தப்பியோடியுள்ளார். சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள பொலிசார் ராமஜெயத்தை தேடி வருகிறார்கள்.