உச்சக்கட்ட கோபத்தில் கமல்..

735

Kamal_Hasan

விஸ்வரூபம் படத்தை இயக்கி வந்த போது தன்னைப் பற்றிய தகவலை உடனுக்குடன் வெளியான போது மகிழ்ச்சியடைந்த கமல் தற்போது கோபத்தின் உச்ச கட்டத்தில் காணப்படுகிறார்.
தற்போது விஸ்வரூபம் 2 மற்றும் அதற்கடுத்து தான் இயக்கப் போகும் படங்கள் பற்றிய தகவலை ஊடகங்கள் பரபரப்பாக வெளியிட்டு வருவதால் டென்சனாகி உள்ளாராம்.

குறிப்பாக திருப்பதி பிரதர்ஸ்க்காக தான் இயக்கும் கொமடி படம் பற்றிய தகவலை லிங்குசாமியே அறிவித்து விட்டாராம்.இந்நிலையில் அந்த படத்தில் காஜல் அகர்வால், திவ்யா ஸ்பந்தா உட்பட நடிகைகளை நடிக்க வைக்கும் முயற்சி நடக்கிறது என்ற தகவலும் வெளியாகி வருவதால், இது எப்படி வெளியாகிறது என்று தனது உதவியாளர்களிடம் சாடுகிறாராம்.

இப்படி அவர் கோபத்தை காட்டி வந்த நேரத்தில் தற்போது அப்படத்திற்கு உத்தம வில்லன் என்ற பெயர் வைத்திருப்பதையும் ஊடகங்கள் கண்டுபிடித்து செய்தியாக வெளியிட்டது.

இதனால் கமலின் கோபம் இன்னும் உச்சத்துக்கு சென்றுள்ளதாம். இதையடுத்து இனிமேல் நான் இயக்கும் படங்கள் பற்றிய தகவலை எனக்குத் தெரியாமல் யாரும் வெளியில் மூச்சு விடக் கூடாது என்று தன்னை சுற்றியிருப்பவர்களிடம் கட்டளையிட்டுள்ளாராம் கமல்.