இளைஞரை நிர்வாணமாக்கி பொலிஸ் அதிகாரிகள் செய்த செயல் : வெளியான அதிர்ச்சித் தகவல்!!

351

புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன். பி.டெக் பட்டதாரியான இவருக்கு சொந்தமாக இரு டிராக்டர்கள் உள்ளது. இவர் அந்த இரு டிராக்டர்கள் மூலம் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தனியார் சர்க்கரை ஆலைக்கு கரும்பு ஏற்றிச் சென்று பிழைப்பு நடத்தி வருகிறார்.

இந்நிலையில், கடந்த 2010ம் ஆண்டு காலை கரும்பு ஏற்ற காத்திருந்த மணிகண்டனை, சிவகங்கை காவல் நிலைய உதவி ஆய்வாளர் வடிவேல் முருகன், எந்த தகவலும் கூறாமல் காவல்நிலையத்திர்கு அழைத்துச் சென்றுள்ளார்.

காவல்நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட அவரை நிர்வாணமாக்கி, பொலிசார் தாக்கி துன்புறுத்தியுள்ளனர். ஐந்து நாட்கள் மணிகண்டனை சட்டவிரோதமாக சிறை வைத்து அடித்து துன்புறுத்திவிட்டு, அதன் பின் லாரி திருடிய குற்றத்திற்காக கைது செய்ததாகவும், பின் உண்மையான திருடனைக் கண்டுபிடித்து விட்டதாகவும் கூறி பொலிசார் விடுவித்துள்ளனர்.

இதனால் மணிகண்டன் தனக்கு நீதி வேண்டும் என்று கூறி தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையத்தில் புகார் அளித்தார்.

இந்தப் புகாரை விசாரித்த நீதிபதி, கைது செய்யப்பட்ட மணிகண்டனை 24 மணி நேரத்தில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தாமல், சட்டவிரோதமாக சிறை பிடித்து, சித்ரவதை செய்த ஆய்வாளர் நந்தகுமார், உதவி ஆய்வாளர் வடிவேல் முருகன் ஆகியோருக்கு 2 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.

இந்தத் தொகையை, பாதிக்கப்பட்ட மணிகண்டனுக்கு இழப்பீடாக வழங்கவும், மனிதத் தன்மையில்லாமல் சட்டவிரோதமாக நடந்துகொண்ட இரண்டு காவல் துறை அதிகாரிகள் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் நீதிபதி பரிந்துரைத்து உத்தரவிட்டார்.