வவுனியா வைத்தியசாலையில் வைத்தியர்கள் பணிப் புறக்கணிப்பு : மக்கள் அவதி!!

605

 

வவுனியா பொது வைத்தியசாலையின் வைத்தியர்கள் இன்று (14.05) ஒரு நாள் பணி பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் வடமாகாணம் தழுவிய ரீதியில் நடைபெற்றுவரும் வைத்தியர்களின் பணி பகிஸ்கரிப்பானது வவுனியாவிலும் முன்னெடுக்கப்படுகிறது.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் வவுனியா மாவட்டத்தின் உப தலைவர் செ.மதுரகன், 2015 ஆம் ஆண்டிலிருந்து வைத்தியர்களுக்கு விகிதாசார அடிப்படையில் சம்பள அதிகரிப்பானது அதிகரிக்கப்பட்டு வழங்கப்பட்டு வந்த நிலையில், மேலதிக கொடுப்பனவுகள் தொடர்பாக அரச சுற்றறிக்கைக்கு அமைவாக ஏனைய மாகாணங்களுக்கு சம்பள அதிகரிப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில் வடமாகாணத்திலுள்ள வைத்தியர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து அடையாள பணி பகிஸ்கரிப்பு மேற்கொள்ளப்படுகின்றது எனத் தெரிவித்தார்.