12 வயது சிறுமியை பலாத்காரம் செய்த 5 சிறுவர்கள் : எங்கே போகின்றது உலகம்?

683

இந்தியாவின் ஆந்திரா மாநிலத்தில் 12 வயது சிறுமியை மிரட்டி 5 சிறுவர்கள் தொடர் 2 மாதம் வரை பாலியல் பலாத்காரம் செய்து துன்புறுத்திய சம்பவம் வெளிச்சத்துக்கு வந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த சிறுவர்களில் இருவரை வீடு புகுந்து தாக்கிய கும்பல் ஒன்று, அவர்களின் ஆடைகளை களைந்து கொடூரமாக தாக்கிய நிலையில் பொலிசார் அவர்களை மீட்டுள்ளனர்.

எஞ்சிய மூவரையும் பின்னர் பொலிசார் கைது செய்துள்ளதாக கூறப்படுகிறது. பின்னர் 5 சிறுவர்களையும் உள்ளூர் நீதிமன்றம் ஒன்றில் சமர்ப்பித்து சிறுவர் சீர் திருத்த பள்ளிக்கு அனுப்பியுள்ளனர்.

சித்தூர் பகுதியில் உள்ள பகத்சிங் நகரில் குடியிருக்கும் குறித்த சிறுவர்கள் 5 பேரும் அதே பகுதியில் குடியிருக்கும் சிறுமியை மிரட்டி பாலியல் துன்புறுத்தல் அளித்துள்ளனர்.

குறித்த சிறுவர்கள் 5 பேரும் ஆபாச படங்களுக்கு அடிமையானவர்கள் எனவும், தங்களது மொபைல் போனில் பல எண்ணிக்கையிலான ஆபாச வீடியோக்களையும் சேகரித்து வைத்திருந்ததாகவும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த விவகாரம் தொடர்பில் சிறுமியின் தாயார் மற்றும் உறவினர் ஒருவர் பொலிசாரிடம் புகார் அளித்துள்ளதாகவும், ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் கூறப்படுகிறது.

ஆனால் பொதுமக்கள் ஒன்றிணைந்து அந்த சிறுவர்களை கொடூரமாக தாக்கியதன் பின்னரே பொலிசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.