வவுனியா ஒமந்தையில் புகையிரத்துடன் டிப்பர் மோதி விபத்து!!

615

 

வவுனியா ஒமந்தையில் இன்று (26.05.2018) மாலை 6.10 மணியளவில் ரயிலிலுடன் மோதி டிப்பர் வாகனம் விபத்துக்குள்ளானது.

ஒமந்தை அரசமுறிப்பு பகுதியில் மண் மற்றும் கல் ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனம் ரயில்வே தண்டவாளத்தில் புதையுண்டது. இதன் போது கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த புகையிரதம் குறித்த டிப்பர் வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளானது.

இவ் விபத்தில் புகையிரதம் பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன் டிப்பர் வாகனத்திற்கு எவ்வித சேதங்களும் ஏற்படவில்லை

சம்பவ இடத்திற்கு விரைந்த ஒமந்தை போக்குவரத்து பொலிஸார் துரிதமாக செயற்பட்டு டிப்பர் வாகனத்தினை அவ்விடத்திலிருந்து அகற்றினார்கள்.

இவ் விபத்துச்சம்பவம் காரணமாக சுமார் 30 நிமிடங்களின் பின்னரே புகையிரதம் யாழ்ப்பாணம் நோக்கி பயணித்தது.