பக்தர்களால் நிரம்பி வழியும் வற்றாப்பளை அம்மன் ஆலயம்!!

432


வரலாற்றுப் பிரசித்தி பெற்ற முல்லைத்தீவு வற்றாப்பளைக் கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த வைகாசிப் பொங்கல் விழா இன்று இடம்பெற்றுள்ளது.

பொங்கல் நடைபெறப் போகின்றது என்பதை உபயகாரர்களுக்கும், பொதுமக்களுக்கும் புலப்படுத்தும் பாக்குத் தெண்டல் நிகழ்வு கடந்தவாரம் இடம்பெற்றது.



அத்துடன் பாக்குத் தெண்டியவரே தீர்த்தமெடுக்கும் வெங்கலப் பாத்திரத்தைச் சுமந்து செல்வார். வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தில் உப்பு நீரில் விளக்கேற்றுவதற்காக கடந்த 21ஆம் திகதி சிலவாத்தை பெருங்கடலில் இருந்து நீர் எடுக்கப்பட்டிருந்தது.

பொங்கல் விழாவின் போது கண்ணகி அம்மனுக்கு உப்பு நீரில் விளக்கேற்றுவது வழக்கமாகும். இதனாலேயே பொங்கல் விழாவிற்கு 7 நாட்களுக்கு முன் விளக்கேற்றுவதற்காக நீர் எடுக்கப்படுகிறது.



மேலும், இன்றைய திருவிழாவை முன்னிட்டு வடக்கு, கிழக்கு தமிழர் பகுதியிலிருந்து மாத்திரமின்றி தென்னிலங்கையிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஆலயத்திற்கு வருகை தந்துள்ளனர்.