5 ஆண்டுகள் துவைக்காத தலையணையை பயன்படுத்திய பெண்ணுக்கு நேர்ந்த கதி!!

493

சீனாவைச் சேர்ந்த பெண் ஐந்து ஆண்டுகளாக, தனது தலையணை உறையை துவைக்காமல் பயன்படுத்தி வந்த நிலையில் அவருக்கு மிகபெரிய ஆபத்து ஏற்பட இருந்தது தெரியவந்துள்ளது.

குறித்த பெண்ணுக்கு கண் எரிச்சல், கண்ணில் நீர்வடிவது, போன்ற பிரச்சினைகள் ஏற்பட்ட நிலையில் மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.

மருத்துவர்கள் அவர் கண்களை பரிசோதனை செய்த போது கண்களில் நூற்றுக்கணக்கான ஒட்டுண்ணிகள் இருப்பது தெரியவந்தது.

இது போன்ற ஒட்டுண்ணிகள் சாதாரணமானது தான் என்றாலும் இவரின் கண்களில் இருக்கும் ஒட்டுண்ணிகளின் எண்ணிக்கை மிக அதிகம்.

இந்த பிரச்சனை அந்த பெண் உபயோகப்படுத்திய தலையணையால் ஏற்பட்டுள்ளது தெரியவந்தது.

அதாவது, அவர் தனது தலையணையை ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக துவைக்காமல் பயன்படுத்தியுள்ளார்.

பொதுவாக ஒரு தலையணையை 2 முதல் மூன்று ஆண்டுகள் வரை பயன்படுத்தலாம். அதுவும் அவ்வப்போது வெயிலில் இட்டு உலர்த்தி, சுத்தமாக துவைத்த தலையணை உறைகள் இட்டு பயன்படுத்த வேண்டும்.

இதையடுத்து பெண்ணுக்கு சுத்தத்தை பற்றி பாடம் எடுத்த மருத்துவர்கள் கண்ணுக்கு மருந்தும் கொடுத்து அனுப்பினார்கள்.

தலையணைகள் சுத்தமாக வைக்கவில்லை எனில் சுவாசம் மற்றும் தோல் தொடர்பான பிரச்சனையும் வர வாய்ப்புள்ளது.