முகநூலில் தனது புகைப்படத்தை பதிவு செய்தது தொடர்பாக கணவன் கேட்டமையினால் மனைவியொருவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டுள்ளதாக கிண்ணியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
திருகோணமலை கிண்ணியா, பைசல் நகரை அண்மித்த கூபா நகரில் வசித்து வந்த ஒரு பிள்ளையின் தாயே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
தற்கொலை செய்து கொண்ட பெண்ணின் கணவர் வெளிநாட்டில் இருந்து அண்மையில் நாடு திரும்பியுள்ளார். இந்த நிலையில் தனது மனைவி முகநூலில் புகைப்படம் பதிவேற்றியுள்ளமை தொடர்பில் கேட்டுள்ளார்.
இதன் பின்பு, அறைக்குள் சென்று கதவை மூடிக்கொண்ட மனைவி நீண்ட நேரமாகியும் கதவைத் திறக்காததால் கதவையுடைத்து பார்த்த பொழுது குறித்த பெண் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் விசாரணையை முன்னெடுத்த பொலிஸார், பெண்ணின் சடலத்தை திருகோணமலை மருத்துவமனையில் ஒப்படைத்ததுடன், பிரேத பரிசோதனைக்கு பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த பெண், 32 வயதுடைய ஹனீபா ஆயிஷா உம்மா என்று ஆரம்ப கட்டவிசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. இதேவேளை, இவருடைய கணவர் வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பி 21 நாள் ஆகின்றமை குறிப்பிடத்தக்கது.





