மனைவியை கொலை செய்து தானும் தற்கொலை செய்து கொண்ட கணவன்!!

956

மனைவியை கொலை செய்த கணவர் தானும் தற்கொலை செய்துள்ளார் என ஜா-எல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று மாலை கணவனுக்கும், மனைவிக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை தாக்கி கொலை செய்துள்ளார். பின்னர், கணவரும் தற்கொலை செய்து கொண்டதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, இருவரினதும் சடலம் மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.